Monday, October 8, 2007

கனவு


இடி இடித்து மேகப் பை கிழிக்க

மின்னல் வந்து அதை தைக்க

மீறிக்கொண்டு மழை பொழிய

நதிக்கரையில் நான் நனைய

கரண்ட் கட் கோடை வெட்பத்தில்

அடங்காமல் அகன்று விழித்தன விழிகள்...
கண் திறந்ததும் தான் கண்டு கொண்டேன்

கண்டது கனவுஎன்று...
--mira

ஒரு தலை காதல்....


பத்து தலை ராவணனின்
தலை துண்டித்த ஒரு தலை காதல்....
--mira

அனாதை


அம்மா -officeக்கும் அடுப்பபடிகுமே

appoinment போதவில்லை...

அப்பா- எப்போதாவது வருவதுண்டு

விருந்தினறைபோல...

அன்பு- அறவே இல்லை

பாசம்-பஞ்சத்தில் இருக்கும் தண்ணீர் குடம்
விளைவு- ration cardடில் மட்டுமல்ல rank cardடிலும் 'H' முத்திரை உடன்
அனாதையாய் நான்...

Wednesday, October 3, 2007

உரிமை






மங்கைக்குள் மனிதப் பயிர் இட்டு

முதல் எழுத்தின் முழு உரிமையையும்
விதையே பெரும் விந்தை !!!

இதனால் தானா...

பெண்ணை மண்ணுக்கு ஒப்பிடுகிறோம்???...



--MIRA

Wednesday, September 19, 2007

மழை காதலி...





மழை காதலி...
கையில் குடை இருந்தும் மழையில் நனைவேன்
மழைக்கும் என் மேல் காதலோ ?
குடை இல்லா நேரம் பார்த்து கொட்டி தீர்த்து விட்டதே....

--MIRA

அம்மா.....











கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்தாலும்....

பூமிக்கு காய்ச்சல் வருவதில்லை.....

நீ குடை குடுத்து அனுப்பியிருந்தும் மழையில்

நனைந்து விட்டு வரும் என்னை கொட்டிவிட்டு
துவட்டி விடும் போதும் வலிப்பதில்லை....
--MIRA

Friday, August 10, 2007

பார்வையின் பொருள்...







புவி நனைக்கும் புரட்டாசி மழைநாள்..... வாயிலில் மழை ரசிக்கும் சிறுவன் பின்வாசலில் மழை பெய்வது கண்டு அதிசயித்ததை நானும்காணும் போது உணர்ந்தேன்......


என்உள் நீ நிறைந்திருப்பதை உணர்ந்ததாக நான் சொன்னபோது மௌனமாய் குழந்தையை பார்ப்பதை போல் நீ பார்த்த பார்வையின் பொருள்...


--MIRA